\
ஏறு தழுவ தயாராகும் அலங்காநல்லூர்.... காளையர்களுக்கான முன்பதிவு தொடக்கம்

ஏறு தழுவ தயாராகும் அலங்காநல்லூர்.... காளையர்களுக்கான முன்பதிவு தொடக்கம்

ஏறு தழுவ தயாராகும் அலங்காநல்லூர்.... காளையர்களுக்கான முன்பதிவு தொடக்கம்
Published on

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க இருக்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று ‌‌நடைபெற்றது.

மதுரை மாவ‌ட்டம் அலங்காநல்லூரில் வரும் 10ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இருக்கும் சுமார் 350க்கும் மேற்பட்ட மா‌டுபிடி வீரர்கள் தங்களின‌ பெயர்களை முன்பதிவு செய்தனர். இவர்களின் பெயர், முகவரி, வயது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தகவல்களை சேகரிக்கும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். மாடுபிடி வீரர்களுக்கு இதயத் துடிப்பு, இரத்த ஓட்டம், உயரம், எடை உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. காளைகளுக்கான முன்பதிவு வரும் 8ம் தேதி நடைபெறுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com