கடன் தொல்லையால் கணவன் மனைவி இடையே தகராறு – தனியார் நிறுவன மேலாளர் எடுத்த விபரீத முடிவு

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவன மேலாளர் தூக்கிட்டு தற்கொலை. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
tragedy
tragedypt desk

சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ்(36). இவருக்கு மோனிகா என்ற மனைவியும் 9 வயதில் ஒரு மகனும் 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில், ராகேஷ் சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கடன் தொல்லை நெருக்கடி காரணமாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Death
DeathFile Photo

இதனால் மன உளைச்சலில் இருநத ராகேஷ் ஸ்ரீபெரும்புதூர் அருகே மன்னூர் பகுதியில் உள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொணடார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், ராகேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து ராகேஷ் குடும்ப பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com