"தமிழ்நாட்டில் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர் நலன் காக்க நடவடிக்கை" - மு.க.ஸ்டாலின்

"தமிழ்நாட்டில் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர் நலன் காக்க நடவடிக்கை" - மு.க.ஸ்டாலின்

"தமிழ்நாட்டில் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர் நலன் காக்க நடவடிக்கை" - மு.க.ஸ்டாலின்
Published on

தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

வெளிநாடு வாழ் தமிழர்கள், இலங்கை தமிழ் அகதிகள் நலன் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போது, தலைநிமிரும் தமிழகம் என்ற திட்டப்படி, வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறையை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், நலத்திட்ட உதவிகளை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com