சிறைபிடிக்கப்பட்ட 38 மீனவர்கள் இன்று தாயகம் வருகை

சிறைபிடிக்கப்பட்ட 38 மீனவர்கள் இன்று தாயகம் வருகை
சிறைபிடிக்கப்பட்ட 38 மீனவர்கள் இன்று தாயகம் வருகை

இலங்கை சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக 38 மீனவர்கள் சர்வதேச எல்லையில் இந்திய கடலோர காவல்படையினரிடம் இன்று ஒப்படைக்கப்படுகின்றனர்.

இலங்கை கடற்படையால் மீனவர் பிரிட்ஜோ கொல்லப்பட்டதர்கு பின்னர், ராமநாதபுரம், புதுக்கோட்டையைச் சேர்ந்த 38 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் அனைவரும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், நல்லெண்ண அடிப்படையில் மார்ச் 31 ஆம் தேதி யாழ்ப்பாணம் சிறையில் இருந்து 30 பேரையும், வவுனியா சிறையில் இருந்து 8 பேரையும் இலங்கை அரசு விடுதலை செய்தது. இதனையடுத்து, விடுதலை செய்யப்பட்ட 38 மீனவர்களையும் சர்வதேச எல்லைப்பகுதியில் இந்திய கடலோர காவல்படையினரிடம் இலங்கை அரசு இன்று ஒப்படைக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com