எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 11 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 11 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 11 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
Published on

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரையும், மூன்று விசைப்படகையும் சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டை பெற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்

இந்த நிலையில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மூன்று விசைப்படகையும் 11 மீனவர்களையும் நடு கடலில் கைது செய்து மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை நேற்று இலங்கை அரசு பகிரங்கமாக ஏலம் விட்டதை அடுத்து மீனவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ள நிலையில் தற்போது மூன்று விசைப்படகையும், 11 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com