இலங்கை தமிழர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கைai
தமிழ்நாடு
இலங்கை தமிழர்கள் தாயகம் திரும்பலாம்.. இலங்கை அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் இலங்கை தமிழர் அகதிகளுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்றும், தாராளமாக அவர்கள் தாயகம் திரும்பலாம் என இலங்கை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பிமல் ரத்நாயக்க
யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் இருந்து வந்த இலங்கை அகதிகள் சிலர், பலாலி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அரசு தலையிட்டதால் விடுவிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினா ர். இனி இலங்கைவாசிகள் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தின் வழியேயும் அச்சமின்றி தாயகம் திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நாடு திரும்பும் அகதிகளுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

