சிறையில் உள்ள 11 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள 11 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள 11 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு
Published on

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 7-ம் தேதி மீன் பிடிப்பதற்காக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்த நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 11 மீனவர்களையும், 3 விசைப்படகையும் கைது செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பிப்ரவரி 22-ம்தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்திருத்தார்.

இதையடுத்து கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி சிறைக்காவல் முடிந்து மீண்டும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டதில் மார்ச் (8ம் தேதி) வரை காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதைத் தொடர்ந்து இன்று சிறைக்காவல் முடிந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்  11 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படகு சம்பந்தமாக வழக்கு நடத்த படகு உரிமையாளர் விரும்பினால் வருகின்ற 28ம் தேதி நீதிமன்றத்திற்கு வந்து வழக்கை எடுத்து நடத்தலாம் என்றும் தீர்ப்பளித்துள்ளனர். இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாள்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com