இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி - தமிழக ரயில் நிலையங்களில் சோதனை

இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி - தமிழக ரயில் நிலையங்களில் சோதனை
இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி - தமிழக ரயில் நிலையங்களில் சோதனை

இலங்கை குண்டுவெடிப்பின் எதிரொலியாக சென்னை செண்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தன்று 7 இடங்களில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.பின்னர் செயலிழக்கம் செய்துபோது ஒரு குண்டு வெடித்தது. இந்தச் சம்பவங்களில் 350க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இந்தத் தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக இலங்கையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இலங்கையில் பொதுமக்கள் யாரும் பொது இடங்களில் கூட வேண்டாம் என்றும், தங்கள் நாட்டினர் யாரும் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்றும் அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. மேலும் சில நாடுகளும் தங்கள் குடிமக்களை இலங்கை செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. 

இதனால் இலங்கையின் அண்டை நாடான இந்தியாவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பகுதிகளில் கண்காணிப்பை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னை செண்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலைத்திலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்படுகின்றன. நிலையத்திற்குள் வரும் மற்றும் அங்கிருந்து செல்லும் ரயில்களிலும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

சுமார் 200 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மட்டுமின்றி கோவை, மதுரை, திருச்சி மற்றும் நெல்லையிலுள்ள ரயில் நிலையங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரயில் நிலையங்களில் கேட்பாரற்று கிடக்கும் பொருள்கள் குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்கும்படி பயணிகளுக்கு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com