துளிர்க்கும் நம்பிக்கை: மாற்றுத்திறனாளிகளுக்கு விரைந்து உணவு பொருட்கள் வழங்கிய 'கிராமியம்’

துளிர்க்கும் நம்பிக்கை: மாற்றுத்திறனாளிகளுக்கு விரைந்து உணவு பொருட்கள் வழங்கிய 'கிராமியம்’
துளிர்க்கும் நம்பிக்கை: மாற்றுத்திறனாளிகளுக்கு விரைந்து உணவு பொருட்கள் வழங்கிய 'கிராமியம்’

'புதிய தலைமுறை'யின் 'துளிர்க்கும் நம்பிக்கை' முன்னெடுப்பின் வாயிலாக உதவி கோரிய திருச்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு கிராமியம் தொண்டு நிறுவனத்தின் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

திருச்சி காவல்காரபாளையத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சுப்பிரமணி மற்றும் அவரது நண்பர் ரவி ஆகியோர் 'துளிர்க்கும் நம்பிக்கை' முன்னெடுப்பிற்காக கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு அழைத்து உதவி கோரியிருந்தனர். அழைத்த இரண்டு மணி நேரத்தில் குளித்தலை பகுதியில் இயங்கி வரும் கிராமியம் என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் தலா ரூ.2000 மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் இருவருக்கும் வழங்கப்பட்டன.

உணவுப்பொருட்கள் வழங்கிய தொண்டு நிறுவனத்திற்கும், ஏற்பாடு செய்த 'புதிய தலைமுறை'க்கும் மாற்றுத் திறனாளிகள் உணர்ச்சி பொங்க நன்றி தெரிவித்தனர்.

> புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு நூற்றுக்கணக்கான அழைப்புகள் உதவி கோரி வந்துகொண்டிருக்கின்றன. எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள். உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com