ஈரோடு: காங். கட்சி வேட்பாளர் மனைவியின் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி நகைகள் பறிப்பு

ஈரோடு: காங். கட்சி வேட்பாளர் மனைவியின் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி நகைகள் பறிப்பு
ஈரோடு: காங். கட்சி வேட்பாளர் மனைவியின் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி நகைகள் பறிப்பு

ஈரோடு மாநகராட்சி வார்டு‌ உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் மனைவியின் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி, அவர் அணிந்திருந்த 6 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருங்கல்பாளையம் நாட்ராயன்கோயில் வீதியை சேர்ந்தவர் ஈ.பி.ரவி. இவர் காங்கிரஸ் கட்சியின் ஈரோடு மாவட்ட தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாநகராட்சி 16வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவரது மனைவி புனிதா ஆறுமுகம் வீதியில் மாவு அறைத்துவிட்டு தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் புனிதாவின் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி அவர் கையில் அணிந்திருந்த 6 பவுன் தங்க வளையலை பறித்து சென்றுள்ளனர்.

புனிதா நிலையை சுதாரிப்பதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காங்கிரஸ் கட்சியினர் அப்பகுதியில் குவிந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார், அப்பகுதியில் வீடுகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் மாநகராட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளரின் மனைவியிடம் கொள்ளை நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com