திருவாரூரில் ரூ.3 லட்சம் மதிப்பிலான சாராயம் பறிமுதல்

திருவாரூரில் ரூ.3 லட்சம் மதிப்பிலான சாராயம் பறிமுதல்
திருவாரூரில் ரூ.3 லட்சம் மதிப்பிலான சாராயம் பறிமுதல்

திருவாரூர் அருகே வாகன சோதனையின் போது, காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூர் கந்தன்குடியில் நடைபெற்ற சோதனையில் சொகுசுக் காரில் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், புதுச்சேரி மது பாட்டில்களில் 10 லிட்டர் எரிசாராயம் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனையடுத்து, எரிசாராயமும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டன. ஓட்டுநர் பவித்ரன் என்பவரிடம் விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com