மதுரை: நிபா வைரஸால் பாதிக்கப்பட்டால் சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு

மதுரை: நிபா வைரஸால் பாதிக்கப்பட்டால் சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு
மதுரை: நிபா வைரஸால் பாதிக்கப்பட்டால் சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு

மதுரையில் யாருக்கேனும் நிபா வைரஸ் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் இதற்காக பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸால் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்த வார்டு பயன்படுத்தப் படவுள்ளதாகவும், இதில் 20 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு படுக்கைகளிலும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com