தமிழ்நாட்டில் நாளை முதல் மீண்டும் சிறப்பு ரயில்கள் இயக்கம்

தமிழ்நாட்டில் நாளை முதல் மீண்டும் சிறப்பு ரயில்கள் இயக்கம்

தமிழ்நாட்டில் நாளை முதல் மீண்டும் சிறப்பு ரயில்கள் இயக்கம்
Published on

தமிழ்நாட்டில் பயணிகள் வருகை குறைவால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட 10 சிறப்பு ரயில்களின் சேவை நாளை முதல் தொடங்கப்பட உள்ளது.

சென்னை எழும்பூரிலிருந்து தஞ்சாவூர், கொல்லம், ராமேஸ்வரம், திருச்சி செல்லும் 4 சிறப்பு ரயில்கள் நாளை முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளன. இதேபோல், சென்னை சென்ட்ரலிலிருந்து திருவனந்தபுரம், ஆலப்புழா, மேட்டுப்பாளையம் செல்லும் 3 சிறப்பு ரயில்களும் நாளை புறப்பட உள்ளன. மேலும், கோவையிலிருந்து நாகர்கோவில், மதுரையில் இருந்து புனலூர் செல்லும் சிறப்பு ரயில்களும், திருவனந்தபுரத்திலிருந்து மதுரை செல்லும் சிறப்பு ரயிலும் நாளை முதல் சேவையை தொடங்க உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com