காரைக்குடி-திருவாரூர் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்

காரைக்குடி-திருவாரூர் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்

காரைக்குடி-திருவாரூர் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்
Published on

காரைக்குடி- திருவாரூர் ரயில் நிலையங்களுக்கு இடையே நாளை முதல் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி திருவாரூர் - காரைக்குடி சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் திருவாரூரிலிருந்து காலை 08.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.15 மணிக்கு காரைக்குடி சென்று சேரும். மறுமார்க்கத்தில் காரைக்குடி - திருவாரூர் சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காரைக்குடியிலிருந்து மதியம் 02.30 மணிக்கு புறப்பட்டு இரவு 08.30 மணிக்கு திருவாரூர் செல்லும்.

இந்த ரயில்கள் மாங்குடி, மாவூர் ரோடு, திருநெல்லிக்காவல், அம்மனூர், ஆலத்தம்பாடி, மணலி, திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, ஒட்டங்காடு, பேராவூரணி, ஆயின்குடி, அறந்தாங்கி, வளர மாணிக்கம், பெரியகோட்டை, கண்டனூர் புதுவயல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com