தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை
Published on

தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு செல்லும் அந்த்யோதயா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரயில் முனையமாக தாம்பரம் மாற்றப்பட்டதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு  அந்த்யோதயா சிறப்பு எக்ஸ்பிரஸ் துவங்கப்பட்டது. வாரம் 5 நாட்கள் இயக்கப்பட்ட இந்த சிறப்பு ரயில் பகல் நேரம் பயணிக்கும் பயணிகளுக்கு வசதியாக இயக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் முதல் இந்த ரயில் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி தவிப்பதாக வருத்தம் தெரிவிக்கின்றனர் பயணிகள். அனைவருக்கும் பலன் அளிக்கும் அந்த ரயிலை மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com