\
சட்டப்பேரவைத் தேர்தல்: தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சட்டப்பேரவைத் தேர்தல்: தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சட்டப்பேரவைத் தேர்தல்: தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
Published on

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழான தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இன்று முதல் வரும் 5-ஆம் தேதி வரை இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து 5 நாட்களுக்கு 14 ஆயிரத்து 215 பேருந்துகளும், கோவை, திருப்பூர், சேலம், பெங்களூரு நகரங்களில் இருந்து 2 ஆயிரத்து 644 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஏப்ரல் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் மட்டும் பண்டிகை காலங்களைப் போன்று சென்னையில் 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனையும், முகக்கவசம் அணிவதும் கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துளை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக சுகாதாரத்துறையும் பயணிகளுக்கான பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com