"பக்குவமில்லாமல் பேசுகிறார் அண்ணாமலை.."- கோபப்பட்ட SP வேலுமணி

கோவையில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி அண்ணாமலை பக்குவமில்லாமல் பேசுகிறார் என விமர்சித்துள்ளார்.

கோவை இதய தெய்வம் மாளிகையில் அதிமுகவின் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் அதில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்குபெற்று முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், அறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் “அண்ணா பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு தகுதி வேண்டும். அண்ணாமலை பக்குவமில்லாமல் பேசிவருவகிறார்” என்றார். ஏற்கெனவே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சிவி சண்முகம் முதலியோர் அண்ணாமலை பேசியதற்கு எதிர்வினையாற்றிவரும் நிலையில், தற்போது எஸ்பி வேலுமணியும் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com