புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை - தெற்கு ரயில்வே

புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை - தெற்கு ரயில்வே

புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை - தெற்கு ரயில்வே
Published on

கொரோனா பரவலைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்குவரும் நிலையில் 20ஆம் தேதிவரை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதியில்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

முன்களப் பணியாளர்கள், ரயில்வே ஊழியர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மட்டும் புறநகர் ரயிலில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்களும் புறநகர் ரயிலில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் துறைமுகப் பணியாளர்கள், ஊடகத்துறையினர், மின்னணு வணிக்கத்தினர், அரசு, தனியார் வங்கிப் பணியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com