12 ஆண்டுகளுக்கு பின் மதுரையிலிருந்து தேனிக்கு முன்பதிவில்லா தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை கடந்த 26ஆம் தேதி சென்னையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். அதன்படி மதுரையில் இருந்து தேனிக்கு தினசரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் போக்குவரத்து கடந்த 27-ஆம் தேதி துவங்கியது. தென்னக ரயில்வே அட்டவணைப்படி காலை 8.30 மணிக்கு 12 பெட்டிகளுடன் கிளம்பிய பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, நிறுத்தங்களில் நின்று காலை 09.35 மணிக்கு தேனியை வந்தடைந்தது.