தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே தாயை வெற்றி கொன்றுவிட்டு மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே செருகுடி கிராமத்தில் 55 வயதான மலர் என்ற தாயை, அவரது மனநிலை பாதிக்கப்பட்ட மகன் ராதாகிருஷ்ணன் வெட்டி கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
சுவாமிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மலரின் கணவர் சுப்பிரமணியன் கேரளாவில் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மற்றொரு மகன் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். கொலையாளி 10 ஆண்டுகளாக மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சுவாமிமலை போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். போலீசாரின் முழு விசாரணைக்கு பின்னரே இதற்கான காரணம் தெரியவரும்.