\
“ஆளுநர் மாளிகை பெயரில் இயங்கும் போலி கணக்குகளை நம்பி ஏமாற வேண்டாம்”- ஆளுநர் மாளிகை அறிக்கை

“ஆளுநர் மாளிகை பெயரில் இயங்கும் போலி கணக்குகளை நம்பி ஏமாற வேண்டாம்”- ஆளுநர் மாளிகை அறிக்கை

“ஆளுநர் மாளிகை பெயரில் இயங்கும் போலி கணக்குகளை நம்பி ஏமாற வேண்டாம்”- ஆளுநர் மாளிகை அறிக்கை
Published on

ஆளுநர் மாளிகை பெயரில் இயங்கும் போலி சமூகவலைதள கணக்குகளை நம்பி மக்கள் ஏமாந்துவிட வேண்டாமென ஆளுநர் மாளிகை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ‘ஆளுநர் மாளிகை பெயரில் இயங்கும் சில போலி மின்னஞ்சல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணையும் நடந்துவருகிறது. இப்படியான போலி கணக்குகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். govtam@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியும், @rajbhavan_tn என்ற ட்விட்டர் கணக்கும்தான் அதிகாரப்பூர்வமானவை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com