கோவை சிறுமியை மேலும் ஒருவர் வன்கொடுமை செய்தது சோதனையில் கண்டுபிடிப்பு

கோவை சிறுமியை மேலும் ஒருவர் வன்கொடுமை செய்தது சோதனையில் கண்டுபிடிப்பு

கோவை சிறுமியை மேலும் ஒருவர் வன்கொடுமை செய்தது சோதனையில் கண்டுபிடிப்பு
Published on

கோவையில் 7 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைதான நிலையில் மேலும் ஒருவருக்கு தொடர்பிருப்பதாக டிஎன்.ஏ சோதனையில் தெரியவந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் கோவையைச் சேர்ந்த 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அதேபகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இருதரப்பு விசாரணையும் முடிவுற்ற நிலையில் நாளை தீர்ப்பு வெளியாகவுள்ளது. இந்நிலையில் சிறுமியின் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, கோவையில் 7 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைதான நிலையில் மேலும் ஒருவருக்கு தொடர்பிருப்பதாக டிஎன்.ஏ சோதனையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து தடயவியல் அறிக்கையின் அடிப்படையில் மறுவிசாரணை கோரி நீதிமன்றத்தில் சிறுமியின் தாய் கோவை மகிளா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், “நான் முன் கூட்டியே சொன்னபடி இதில் பலபேருக்கு தொடர்பிருப்பதாக தெரிகிறது. எனவே ஒரு பெண் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்” என சிறுமியின் தாய் கூறியுள்ளார். இதுகுறித்த விசாரணை நாளை நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com