தமிழ்நாடு
மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து: அமைச்சரை முற்றுகையிட முயன்ற உறவினர்கள்
மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து: அமைச்சரை முற்றுகையிட முயன்ற உறவினர்கள்
கோவை அடுத்துள்ள சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த விபத்து உயிரிழந்த 5 பேரில், 4 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பேருந்து நிறுத்தத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து உரிய விளக்கம் அளிக்கும் வரை உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க முடியாது என உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுடன் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையின் உடன்பாடு ஏற்பட்டதால், உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த விபத்தில், படுகாயமடைந்த 15 பேருக்கு கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, அவரை உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அமைச்சரை முற்றுகையிட முயன்றனர்.