டாஸ்மாக்கில் மாஸ்க், தனி மனித இடைவெளி அவசியம்!

டாஸ்மாக்கில் மாஸ்க், தனி மனித இடைவெளி அவசியம்!
டாஸ்மாக்கில் மாஸ்க், தனி மனித இடைவெளி அவசியம்!

டாஸ்மாக் கடைகளில் கூட்ட நெரிசல் இருக்கக் கூடாது என்றும் தனி மனித இடைவெளி அவசியம் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வரைஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வர இருக்கிறது. இதனையடுத்து வழக்கமாக இரவு 10 மணிக்கு மூடப்படும் நிலையில் நாளை முதல் இரவு 9 மணிக்கு மூடப்படும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மேலும் சில அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், மதுகடைக்குள் 5 பேருக்கு மேல் இருக்கக் கூடாது. அதேபோல மதுப்பிரியர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் வரிசையில் 6 அடிக்கு தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படும். டாஸ்மாக்கில் அதிக கூட்ட நெரிசல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com