தமிழ்நாடு
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஸ்னோலின் உடல் அடக்கம்
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஸ்னோலின் உடல் அடக்கம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாணவி ஸ்னோலினின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் ஸ்னோலின் உடல் உள்பட 7 உடல்களுக்கு நீதிமன்ற உத்தரவையடுத்து, மறுபிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து ஸ்னோலினின் உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்று அவரது சொந்த ஊரான மினி சகாயபுரத்தில் அடக்கம் செய்தனர்.