கட்டிலில் படுத்துக்கொண்டு டிவி பார்த்த‌ பாம்பு..!

கட்டிலில் படுத்துக்கொண்டு டிவி பார்த்த‌ பாம்பு..!
கட்டிலில் படுத்துக்கொண்டு டிவி பார்த்த‌ பாம்பு..!

வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க, வீட்டுக்குள் புகுந்த நல்லபாம்பு ஒன்று,‌கட்டிலில் படுத்துக்கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்த சம்பவம் காண்போரை அதிர்ச்சியடையவைத்தது. 

கடலூர் சோனாங்குப்பத்தில் வசிப்பவர் பிச்சாண்டி. இவரது வீட்டிற்குள் இன்று நல்ல பாம்பு ஒன்று நுழைந்தது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நுழைந்த அப்பாம்பு ஏர் கூலர் அருகே கட்டிலில் படுத்துக்கொண்டு டிவியை நோக்கி படமெடுத்தபடி பார்த்துக்கொண்டிருந்தது. இதனைக்கண்ட பிச்சாண்டியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே வனவிலங்கு ஆர்வலருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வரும்வரை அந்தப் பாம்பு வீட்டினரை நோக்கியும், டிவியை நோக்கியும் படமெடுத்தபடி இருந்தது. பின்னர் வந்த வனவிலங்கு ஆர்வலர், பாம்பை கச்சிதமாகப் பிடித்தார். மேலும் யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் அதனைப் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேசு பொருளாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com