ஜன.1 முதல் ஸ்மார் கார்ட் இருந்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள்!

ஜன.1 முதல் ஸ்மார் கார்ட் இருந்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள்!

ஜன.1 முதல் ஸ்மார் கார்ட் இருந்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள்!
Published on

ஜனவரி 1 ஆம்தேதி முதல் ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கக்கூடாது என்று பொதுவிநியோகத்துறை உத்தரவிட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது. சுமார் 60 சதவீதம் பேருக்கு மட்டுமே ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. குளறுபடிகள் காரணமாக இன்னும் 40 சதவீதம் பேருக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் ரேஷன் ஸ்மார்ட் கார்ட் வழங்கும் பணிகளை வரும் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து ஜனவரி முதல் ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே பொதுவிநியோக பொருட்கள் வழங்கவேண்டும். பழைய அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை என்று மாவட்ட மற்றும் வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு பொதுவிநியோகத்துறை உத்தரவிட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com