"உக்ரைன் போரை நிறுத்துங்கள்" - நாக்கால் படம் வரைந்து வலியுறுத்தும் சிவகாசி மாணவன்

"உக்ரைன் போரை நிறுத்துங்கள்" - நாக்கால் படம் வரைந்து வலியுறுத்தும் சிவகாசி மாணவன்
"உக்ரைன் போரை நிறுத்துங்கள்" - நாக்கால் படம் வரைந்து வலியுறுத்தும் சிவகாசி மாணவன்

உக்ரைன் போரை நிறுத்தக் கோரியும், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க வலியுறுத்தியும் சிவகாசியைச் சேர்ந்த பொறியல் மாணவன் தனது நாக்கால் படம் வரைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைனின் மூன்று பகுதிகளிலும் லட்சக்கணக்கான ராணுவ வீரர்களை குவித்து வைத்துள்ள ரஷ்யா, அங்கிருந்து பயங்கர தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனிடையே, அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பது குறித்தும், மீட்பது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ரஷ்யாவுடனும், உக்ரைனுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லை சேர்ந்த பொறியியல் மாணவன் பிரவீன் என்பவர், உக்ரைன் போரை நிறுத்தக் கோரியும், அங்குள்ள தமிழக மாணவர்களை மீட்க வலியுறுத்தியும் தனது நாக்கால் பல படங்களை வரைந்து அனைவரையும் ஈர்த்து வருகிறார்.

10.8 செ.மீ. நீளம் நாக்கை கொண்டிருக்கும் பிரவீன், இந்தியாவிலேயே அதிக நீளமான நாக்கை உடையவர் என்ற பெருமையை கொண்டவர். கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று 208 அடி நீளத்தில் தேசியக் கொடியை தனது நாக்கால் வரைந்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com