சிவகாசி: புதுப்பட்டி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 4 பேர் பலி

சிவகாசி: புதுப்பட்டி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 4 பேர் பலி
சிவகாசி: புதுப்பட்டி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 4 பேர் பலி

சிவகாசி அருகே புதுப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டு படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 6 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர், பட்டாசு விபத்தில் 7 அறைகள் தரைமட்டமான நிலையில் 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இந்த தொழிற்சாலையில் சுமார் 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது பட்டாசுகள் வெடித்து சிதறியதால் விபத்து ஏற்பட்டது.

விபத்தினை தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் , விபத்து நடந்த ஆலை விதிமுறைகளை மீறி இயங்கியது தெரியவந்ததால் அந்த ஆலையை மூட மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com