சிவகாசி: திருமணத்தை மீறிய உறவு - இருவர் சடலமாக மீட்பு

சிவகாசி: திருமணத்தை மீறிய உறவு - இருவர் சடலமாக மீட்பு

சிவகாசி: திருமணத்தை மீறிய உறவு - இருவர் சடலமாக மீட்பு
Published on

சிவகாசி அருகே திருமணத்தை மீறிய உறவில் பெண் இருந்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், இருவர் சடலமாக மீட்கப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர், ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில், இவரது மனைவி சரஸ்வதி அருகிலுள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவருடன் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக சரஸ்வதிக்கு தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் முனியாண்டிக்கும் தனியாக திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த சூழலில் வழக்கம்போல் பணிக்குச் சென்றிருந்த செந்தில்குமார் மாலை நேரத்தில் தனது மனைவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். தொலைபேசி அழைப்பை சரஸ்வதி எடுக்காததால் சந்தேகமடைந்த அவர் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு தொடர்புகொண்டு தனது வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து வீட்டின் கதவு நீண்டநேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்தவர்கள் திருத்தங்கல் நகர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த திருத்தங்கள் நகர் காவல் நிலைய போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சரஸ்வதி மற்றும் முனியாண்டி ஆகிய இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், காவல்துறையினரின் உதவியுடன் சடலத்தை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com