சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தல்: 'குலுக்கல் முறை'யில் அதிமுக வெற்றி

சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தல்: 'குலுக்கல் முறை'யில் அதிமுக வெற்றி

சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தல்: 'குலுக்கல் முறை'யில் அதிமுக வெற்றி
Published on

சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பொன்மணி பாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 4 முறை நிறுத்திவைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்தப் பதவிக்கு அதிமுக சார்பில் பொன்மணி பாஸ்கர் என்பவரும், திமுக சார்பில் செந்தில் என்பவரும் போட்டியிட்டனர்.

அதிமுக - திமுக கூட்டணி தலா 8 வார்டில் சமமாக வெற்றி பெற்றதால், குலுக்கல் முறையில் தலைவர் தேர்வு செய்யப்பட்டார். இந்த குலுக்கல் முறையில் அதிமுக வேட்பாளர் பொன்மணி பாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து 3 மணியளவில் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என எதிர்பாக்கப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com