கந்தூரி விழா
கந்தூரி விழாpt desk

சீர்காழி | சையது யாசின் மவுலானா தர்கா கந்தூரி விழா - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வம்சா வழியினர் வழிபாடு. சையது யாசின் மவுலானா தர்கா கந்தூரி விழாவில் லண்டன், துபாய் உள்ளிட்ட வெளி நாட்டினர் உட்பட. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
Published on

செய்தியாளர்: ஆர்.மோகன்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசலில் இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தின் வம்சா வழி பேரன் ஜமாலியா சையது யாசின் மவுலானா தர்கா அமைந்துள்ளது. தமிழகம் மற்றும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஆன்மிக குருவாக விளங்கிய இவர், இந்தியா மற்றும் கீழ்திசை நாடுகளில் இஸ்லாமிய ஆன்மிகத்தை பரப்பியவர். இறுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசலில் 1964ம் ஆண்டு நல்லடக்கம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு தர்கா அமைத்து வழிபட்டு வருகின்றனர்.

இங்கு ஆண்டு தோறும் யாசின் மௌலானா இறையடி சேர்ந்த தினத்தன்று கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற விழாவில் தஞ்சை, சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள், பல்வேறு மாநிலங்கள் மற்றும் இலங்கை, லண்டன், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் மவுலானவின் கலிபாக்கள், சீடர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு வைபவத்தை முன்னிட்டு சந்தன குடம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சையது யாசின் மவுலான சமாதியில் சந்தனம் பூசும் நிகழ்வு நடைபெற்றது.

கந்தூரி விழா
விளாத்திகுளம் | பத்ரகாளியம்மன் கோயில் விநோத திருவிழா - சேற்றை பூசிக்கொண்டு வலம் வந்த பக்தர்கள்

அதனை தொடர்ந்து சிறப்பு துவா ஓதி வழிபாடு நடைபெற்றது. மேலும் மத நல்லினக்கத்தையும், ஒற்றுமையையும் போற்றும் விதமாக அனைத்து மதங்களையும் சேர்ந்தவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com