சீர்காழி: நின்றிருந்த லாரி மீது மினி டெம்போ மோதி விபத்து - பெண் உட்பட 4 பேர் பலி

சீர்காழி: நின்றிருந்த லாரி மீது மினி டெம்போ மோதி விபத்து - பெண் உட்பட 4 பேர் பலி
சீர்காழி: நின்றிருந்த லாரி மீது மினி டெம்போ மோதி விபத்து - பெண் உட்பட 4 பேர் பலி

சிதம்பரம் புறவழிச்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மினி டெம்போ லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

சேலம் தம்மம்பட்டியைச் சேர்ந்த செல்வகுமார் (38) கற்பகவல்லி (27) மிதுன் (3) லிங்கேஸ்வரன் (28) உள்ளிட்ட 7 பேர் சீர்காழி அருகே உள்ள மாதானம் கிராமத்திற்கு மினி டெம்போ லாரியில் டைல்ஸ் ஏற்றிக் கொண்டு வந்துள்ளனர். அப்போது சிதம்பரம் புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் மினி டெம்போ லாரியின் முன் பக்கத்தில் அமர்ந்து வந்த செல்வகுமார், கற்பகவல்லி, மிதுன், லிங்கேஸ்வரன் உள்ளிட்ட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். லாரியின் பின்னே அமர்ந்திருந்த 3 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் 3 பேரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த அண்ணாமலை நகர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி இறந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்கு பதிந்து விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com