சீர்காழி: பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை மூங்கில் காட்டில் வீசிய அவலம்

சீர்காழி: பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை மூங்கில் காட்டில் வீசிய அவலம்

சீர்காழி: பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை மூங்கில் காட்டில் வீசிய அவலம்
Published on

சீர்காழி அருகே திருமைலாடியில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை மூங்கில் காட்டுப் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட அவலம் ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமையிலாடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் வயல் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது குடியிருப்பு பகுதியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள மூங்கில் காட்டில் குழந்தை அழும் சத்தம் தொடர்ச்சியாக கேட்டுள்ளது.

உடனே கிராமத்தினர் மூங்கில் காட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ரத்தத்துடன் தொப்புள் கொடியோடு முள்ளில் சிக்கி கிடந்துள்ளது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த கிராமத்தினர் குழந்தையை பத்திரமாக மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்ததுடன் கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வழக்குப் பதிந்த கொள்ளிடம் போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com