திமுக அரசுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் - பொள்ளாச்சி ஜெயராமன்

திமுக அரசுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் - பொள்ளாச்சி ஜெயராமன்
திமுக அரசுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் - பொள்ளாச்சி ஜெயராமன்

கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு ஸ்டாலினுக்கு சிறந்த பாடம் கற்பிக்கப்படும் என பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.

மின்சார கட்டண உயர்வை கண்டித்து வருகின்ற 16-ம் தேதி தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுக தலைமை கழகம் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக கழகம் சார்பில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி.ஏ. ஜெயராமன் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய அவர்... இலங்கை அதிபர் ராஜபக்சே போல் திமுக தலைவரும் குடும்பத்தோடு இரவோடு இரவாக தப்பி ஓடக்கூடிய காலம் வரும், கொரோனா ஊரடங்குக்குப் பிறகு மக்கள் தற்பொழுது மீண்டு வரக்கூடிய சூழ்நிலையில் வீட்டு வரி, சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு போன்றவற்றால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்,

இவர்களுக்கு மக்கள் சரியான பாடம் கற்றுக் கொடுப்பார்கள். மேலும் திமுக அரசுக்கு எதிராக ஒருமாத காலம் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். அதை ஆளுநருக்கு அனுப்பி ஸ்டாலினுக்கு சரியான பாடம் கற்பிக்கப்படும் என்று தெரிவித்தார். திருப்பூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்களை திரளாக பங்கேற்கச் செய்ய வேண்டும், தமிழகமே திரும்பிப் பார்க்கக் கூடிய அளவிற்கு திருப்பூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஒன்றிணைந்து நடத்திட வேண்டும் என்றார்.

இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சு.குணசேகரன், உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com