காஞ்சிபுரம் ஆரம்ப சுகாதார மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தட்டுப்பாடு! தொழிலாளர்கள் அவதி

காஞ்சிபுரம் ஆரம்ப சுகாதார மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தட்டுப்பாடு! தொழிலாளர்கள் அவதி
காஞ்சிபுரம் ஆரம்ப சுகாதார மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தட்டுப்பாடு! தொழிலாளர்கள் அவதி

காஞ்சிபுர மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் அப்பகுதி தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். 

கஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம், ஸ்ரீபெரும்புத்தூர் ஒரகடம்படப்பை உள்ளிட்டப் பகுதிகளில் ஏராளமான சிப்காட் தொழில்பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் காஞ்சிபுர மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் இன்றி, அண்டை மாநிலங்கள், வட மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றும் தொழிளாளர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்தி இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இப்படி இருக்க அந்த பகுதியில் இருக்கும் ஆரம்ப சுகாதர மையங்களுக்குச் சென்றால் அங்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இல்லை என்று கூறப்படுகிறது. இந்த தடுப்பூசி பற்றாக்குறையை சரி செய்ய வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இது குறித்து வீடியோ பதிவை காண கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்க..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com