சாரல் மழைக்கு நடுவே குழந்தையை மீட்கும் பணி தீவிரம்

சாரல் மழைக்கு நடுவே குழந்தையை மீட்கும் பணி தீவிரம்

சாரல் மழைக்கு நடுவே குழந்தையை மீட்கும் பணி தீவிரம்
Published on

திருச்சியில் ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியுள்ள குழந்தை பத்திரமாக மீட்கபட வேண்டும் என நாகூர் தர்காவில் மக்கள் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டுள்ளது. 

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணி சுர்ஜித் என்ற இரண்டு வயது குழந்தை தவறி விழுந்தது. சுமார் 18 மணி நேரத்திற்கு மேலாக குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதலில் 26 அடி ஆழத்தில் இருந்த குழந்தை பின்னர் 70 அடிக்கு சென்றதால் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. 

அத்துடன், குழாயில் மண் சரிந்து மூடப்பட்டதால் மேலும் சிக்கல் உண்டானது. இடுக்கி போன்ற கருவி மூலம் மண்ணை அகற்றிவிட்டு குழந்தையை மீட்கும் முயற்சி தீவிரம் காட்டப்பட்டு வருகின்றது. இதனிடையே, மண் மூடப்பட்டதால் ஆழ்துளை கிணற்றில் இருக்கும் குழந்தை சுர்ஜித் அசைவின்றி காணப்படுவது கவலை அளிக்கின்றது. 

இந்நிலையில், குழந்தையை மீட்க போராடி வரும் நடுகாட்டுப்பட்டியில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மீட்பு படையினர் ஆழ்துளை கிணற்றுக்கு மேல் ஒரு தார்பாயை கட்டி மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் குழந்தை சுர்ஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று நாகூர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com