நின்றிருந்த டிப்பர் லாரி மீது ஷேர் ஆட்டோ மோதி விபத்து: ஒருவர் பலி 9 பேர் காயம்

நின்றிருந்த டிப்பர் லாரி மீது ஷேர் ஆட்டோ மோதி விபத்து: ஒருவர் பலி 9 பேர் காயம்
நின்றிருந்த டிப்பர் லாரி மீது ஷேர் ஆட்டோ மோதி விபத்து: ஒருவர் பலி 9 பேர் காயம்

சோளிங்கர் அருகே நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி பகுதியில் சோளிங்கர் திருத்தணி செல்லும் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் லாரி மீது திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டையில் இருந்து பணியாட்களை ஏற்றி வந்த ஷேர் ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது.

இதில், திருவள்ளூர் மாவட்டம் நொச்சிளி கிராமத்தைச் சேர்ந்த வேணுகோபால் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஆட்டோவில் பயணம் செய்த ஒன்பது பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சோளிங்கர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com