\
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து மின்சாரம் பாய்ச்சிய மாணவன் கைது

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து மின்சாரம் பாய்ச்சிய மாணவன் கைது

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து மின்சாரம் பாய்ச்சிய மாணவன் கைது
Published on

திண்டுக்கல் அருகே ஏழாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் அருகே ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர், கையில் மின் கம்பியை பிடித்திருந்தபடி, கடந்த 16-ம் தேதி பிணமாக மீட்கப்பட்டார். வீட்டில் சிறுமி இறந்துக்கிடந்ததை கண்ட அவரது பெற்றோர், சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்திருந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

வீட்டில் சிறுமி தனியாக இருந்ததை அறிந்த கிருபாநந்தன், அவரை பாலியல் வன்கொடுமை செய்ததும், சிறுமியின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொடூரமாக கொன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அச்சிறுவன், சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com