தமிழ்நாடு
சிறுமிக்கு பாலியல் தொல்லை: 99 வயது முதியவர் சென்னையில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: 99 வயது முதியவர் சென்னையில் கைது
பூவிருந்தவல்லி அருகே ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 99 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை பூவிருந்தவல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பரசுராமன். 99 வயதுடைய இவர் அரசு பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது வீட்டில் குடியிருந்த 5-ஆம் வகுப்பு மாணவியான 10 வயது சிறுமிக்கு பரசுராமன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து 99 வயதான முதியவர் பரசுராமனை கைது செய்த காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர். 99 வயதுடைய முதியவர் 10 வயது சிறுமிக்கு பாலியல் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல்கள்: நவீன், செய்தியாளர்.