நான்கு வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - பனியன் தொழிலாளி கைது

நான்கு வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - பனியன் தொழிலாளி கைது
நான்கு வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - பனியன் தொழிலாளி கைது

திருப்பூரில் நான்கு வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்தவரை பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்தனர்.

திருப்பூர் கோல்டன் நகரை சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார். சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த கந்தசாமி (வயது 34) அதே பகுதியில் பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இன்று காலை முதல் மதுபோதையில் இருந்த கந்தசாமி, வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

இதனிடையே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை காணவில்லை என பெற்றோர்கள் தேட ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் சிறுமியின் அலறல் சத்தம் கந்தசாமி வீட்டில் இருந்து கேட்டுள்ளது. உடனடியாக பெற்றோர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது, கந்தசாமி சிறுமிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கந்தசாமியை மரத்தில் கட்டிவைத்து சரமாரியாக தாக்கினர்.  இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார் கந்தசாமியை கைது செய்தனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com