தலைமை ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை: வட்டார கல்வி அதிகாரி பணியிடை நீக்கம்

தலைமை ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை: வட்டார கல்வி அதிகாரி பணியிடை நீக்கம்
தலைமை ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை: வட்டார கல்வி அதிகாரி பணியிடை நீக்கம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தலைமை ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வேடசந்தூர் வட்டாரக் கல்வி அதிகாரி அருண்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தலைமை ஆசிரியைகளுக்கு நேரிலும், செல்போன் மூலமாகவும் இவர், பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தனர். அது தொடர்பான ஆதாரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அதிகாரி அனுப்பி வைத்துள்ளார்.

அதன்பேரில் முதன்மை கல்வி அலுவலர் கருப்பசாமி, அருண்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டதற்கு, குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com