தனித்து வாழ்ந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கமிஷனரிடம் புகார்

தனித்து வாழ்ந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கமிஷனரிடம் புகார்
தனித்து வாழ்ந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கமிஷனரிடம் புகார்

தனியாக வசித்து வரும் தனக்கு பக்கத்து வீட்டு நபர் பாலியல் தொல்லை கொடுப்பதாக இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். 

சென்னையை அடுத்த மாங்காடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, ''கடந்த 10 ஆண்டுகளாக கோவூர் பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் பெங்களூருவில் கார் டிரைவராக உள்ளார். பக்கத்து வீட்டைச் சேர்ந்த பரத் என்னும் வாலிபர் துவக்கத்தில் நண்பராக பழகினார். பின்னர் எனது கணவர் என்னுடன் இல்லாததை பயன்படுத்தி என்னிடம் அடிக்கடி தவறாக நடக்க முயன்றார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனாலும் அவர் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். 

இது தொடர்பாக நான் பரத்தின் குடும்பத்தினரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் என் மீது ஆத்திரமடைந்து என்னை தாக்கினார்கள். அது குறித்து நான் மாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். எனக்கு அவமானம் ஏற்பட்டதால் நான் காவல்நிலைய வாசலில் வைத்து தீக்குளிக்க முயன்றேன். ஆனாலும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னை சமாதானப்படுத்தவே முயன்றனர். இது தொடர்பாக இன்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com