ரயிலுக்கு காத்திருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - இருவர் கைது

ரயிலுக்கு காத்திருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - இருவர் கைது

ரயிலுக்கு காத்திருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - இருவர் கைது
Published on

நெல்லூர் மாவட்டம் சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த போது இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஸ்ரீசிட்டி தொழிற்பூங்காவில் உள்ள செல்போன் தொழிற்சாலையில் விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற பெண் பணிபுரிந்து வருகிறார். 

இவர் சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று இரவு ஸ்ரீசிட்டியில் இருந்து சூலூர்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அதன்பின்னர், அரை மணி நேரம் கழித்து கிருஷ்ணவேணியின் நண்பர் ராஜா அங்கு வந்துள்ளார். 

இதனிடையே கிருஷ்ணவேணி தனியாக இருப்பதை நோட்டமிட்ட அங்கிருந்த ஐந்து இளைஞர்கள், ராஜா வந்தபோது அவரை தாக்கி அவரிடம் இருந்த 500 ரூபாயை பிடிங்கி கொண்டு அடித்து விரட்டியுள்ளனர். பின்னர் கிருஷ்ணவேணியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று 5 பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் ராஜா தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு யாரும் இல்லை என்பதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில், இன்று காலை சூலூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை அருகே பலத்த காயங்களுடன் கிடந்த கிருஷ்ணவேணியை மீட்டு போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்து வாக்குமூலம் பெற்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், மேலும் மூன்று பேரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com