கரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை அமைப்பதற்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் முட்டுக்கட்டை போடுவதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டினார்.
கரூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கண்டித்து வரும் 28ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.