செங்கம்: டாட்டா ஏசி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்.!

செங்கம்: டாட்டா ஏசி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்.!
செங்கம்: டாட்டா ஏசி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்.!

திருவண்ணாமலை செங்கம் அருகே டாடா ஏசி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாமந்திபுரம் பகுதியில் இருந்து டாட்டா ஏசி வாகனம் மூலம் ஈமச்சடங்கில் கலந்து கொள்வதற்காக திருவண்ணாமலை நோக்கி சென்ற போது, அம்மாபாளையம் அருகே டாட்டா ஏசி வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் டாடா ஏசியில் சென்ற 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தில் பலத்த படுகாயம் அடைந்த சித்ரா, ராதிகா, ஏழுமலை ஆகிய மூன்று பேரும் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து பார்சல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com