செங்கல்பட்டு: 1000 மரக்கன்றுகளை வழங்கிய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி

செங்கல்பட்டு: 1000 மரக்கன்றுகளை வழங்கிய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி
செங்கல்பட்டு: 1000 மரக்கன்றுகளை வழங்கிய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி

செங்கல்பட்டில் உள்ள அனந்தமங்கலம் கிராமத்துக்கு, ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் என்பவர் 1,000 மரக்கன்றுகளை வழங்கியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான அகத்தீஸ்வரர் கோயிலை ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் புனரமைத்து வருகிறார். இந்தநிலையில், அகத்தீஸ்வரர் கோயில் மலையை சுற்றியுள்ள பகுதியில் நடுவதற்காக 1,000 மரக்கன்றுகளை அனந்தமங்கலம் கிராமத்துக்கு வழங்கியுள்ளார். அந்த மரக்கன்றுகள் அனைத்தும் இன்று நடப்பட்டன.

இந்த நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குநர், அச்சரப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். "ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்றாலும், அவர் வழியில் தொடர்ந்து தொண்டுகள் செய்வோம்" என்கிறார் ரவிச்சந்திரன்.

- செந்தில்ராஜா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com