"போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்க" - நெய்வேலி செல்வ முருகனின் மனைவி வழக்கு

"போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்க" - நெய்வேலி செல்வ முருகனின் மனைவி வழக்கு
"போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்க" - நெய்வேலி செல்வ முருகனின் மனைவி வழக்கு

விருத்தாச்சலம் கிளைச் சிறையில் விசாரணை கைதி செல்வமுருகன் மரணம் குறித்து நெய்வேலி காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யக்கோரி, மறு பிரேதப்பரிசோதனை கோரியும் அவரது மனைவி பிரேமா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேர்ந்த முந்திரி வியாபாரி செல்வமுருகன் செல்போன் திருட்டு வழக்கில் அக்டோபர் 28ஆம் தேதி நெய்வேலி காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

பின்னர் கைதாகி விருத்தாச்சலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட செல்வமுருகன், நவம்பர் 2ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நவம்பர் 4ஆம் தேதி மரணமடைந்ததாக அவரது குடும்பத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

நெய்வேலி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் அவரை அடித்து சித்ரவதை செய்ததால் தான் செல்வமுருகன் மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட பல தரப்பிலும் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், நெய்வேலி காவல் ஆய்வாளர் ஆறுமுகம் உள்ளிட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கக்கோரி செல்வமுருகனின் மனைவி பிரேமா நவம்பர் 5ஆம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மனு கொடுத்துள்ளார்.

அந்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால், நெய்வேலி காவல் ஆய்வாளர் ஆறுமுகம், நெய்வேலி டி.எஸ்.பி. அலுவலக குற்றப்பிரில் உள்ள சுதாகர், அறிவழகன் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய கோரும் புகாரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி பிரேமா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும், தனது கணவர் செல்வமுருகன் உடலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்களை கொண்டு மறுபிரேதப்பரிசோதனை செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com