“இனி காலையில் காபி டீ குடிக்க வேண்டாம்; மாறாக...”- திமுக மீது செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்

காலை 7:00 மணிக்கு இனிமேல் டீ காபி குடிக்க வேண்டாம், மதுபானம் குடிக்கலாம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
sellur raju
sellur rajupt desk

அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக மதுரை அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

eps
epspt desk

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாடு பல மடங்கு சிறப்பாக நடைபெற உள்ளது. அதிமுகவுக்கு ஏறுகாலம் தொடங்கி இருக்கிறது, திமுகவுக்கு இனி இறங்கு காலம் தான். காலையில் 7:00 மணிக்கு டாஸ்மாக் திறக்கப்பட உள்ளது. மினி குவாட்டர் மக்களுக்கு கொடுக்க உள்ளார்கள். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. காலையில் 7:00 மணிக்கு காபி, டீ குடிக்க வேண்டாம்; அதற்கு பதில் மதுபானம் குடிக்கலாம். திமுக அரசு எதை நோக்கி பயணிக்கிறது என்பது நன்றாக தெரிகிறது.

முன்னாள் முதல்வர் கலைஞர் தான் இந்த தலைமுறையை கெடுத்தவர். தமிழக மக்களை குடிகாரனாக்கிய முதல்வராக ஸ்டாலின் பெயர் எடுப்பார். கூலித் தொழிலாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள் காலையில் குடித்துவிட்டு வேலைக்கு சென்றால் குடும்பத்திற்கு உத்தரவாதம் யார் கொடுப்பது? இது எங்களுக்கு மன வேதனையாக இருக்கிறது.

cm stalin
cm stalinpt desk

எடப்பாடி பழனிசாமி தான் பொதுச் செயலாளர் என தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும். வெங்காயம் விலை 240 ரூபாயாக ஆகிவிட்டது. முன்பெல்லாம் வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும், ஆனால் இவர்கள் ஆட்சியில் வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வருகிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது.

இரண்டு கோடியே 25 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகை கொடுத்தாலும் யாரும் திமுகவிற்கு ஓட்டு போட மாட்டார்கள். திமுகவின் துக்ளக் தர்பார் ஆட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள். கலைஞர் நூலக மாநாட்டிற்கு செயற்கையாக மக்கள் கூட்டத்தைக் கூட்ட நினைக்கிறார்கள்.

தக்காளி விற்பனை
தக்காளி விற்பனை

தக்காளியை ரேஷன் கடையில் விற்பது பெருமையா? நகரும் கடைகள் மூலம் தக்காளியை விற்பனை செய்ய வேண்டும். திமுகவினர் செந்தில் பாலாஜியை சுதந்திரப் போராட்ட தியாகி போல் பார்க்கின்றனர்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com