"பிக்பாஸ் நிகழ்ச்சியை முதல்வரும் அமைச்சர்களும் பார்ப்பதில்லை" - செல்லூர் ராஜூ

"பிக்பாஸ் நிகழ்ச்சியை முதல்வரும் அமைச்சர்களும் பார்ப்பதில்லை" - செல்லூர் ராஜூ

"பிக்பாஸ் நிகழ்ச்சியை முதல்வரும் அமைச்சர்களும் பார்ப்பதில்லை" - செல்லூர் ராஜூ
Published on

பிக்பாஸ் நிகழ்ச்சியை முதல்வரும் அமைச்சர்களும் பார்ப்பதில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜூ பேசுகையில், “அதிமுகவினர் யாருக்கும் பிக்பாஸ் பார்க்க நேரமில்லை. அமைச்சர் பதவி என்பது மலர் படுக்கையில் அமர்வது இல்லை. முள் படுக்கையில் அமர்வது போன்றது.  கூட்டணியை நம்பி அதிமுக இல்லை. அதிமுகவிற்கு கூட்டணி என்பது பெரிதல்ல. மக்கள்தான் எஜமானர்கள். கூட்டணியில் இவர்கள் இருந்தால்தான் வெற்றி என்ற நிலைப்பாடு அதிமுகவுக்கு இல்லை” எனத் தெரிவித்தார்.

இதனிடையே அதிமுக தொண்டர்களின் காலை பிடிக்கிறார் கமல் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “எம்.ஜி.ஆரை நாங்கள்தான் உரிமை கொண்டாட முடியும். கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கலாசார சீரழிவு”என்றார்.

முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியால் பல குடும்பங்கள் சீரழிவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில் பிக்பாஸை முதல்வர் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது என கமல் தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com